இந்தியாவின் அசாம் மாநிலத்தில் 6.1 ரிக்டர் அளவில் பூமி நடுக்கம் பதிவாகியுள்ளது என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியாின் அசாமின் சோனித்பூரில் உள்ள டெக்கியாஜுலி அருகே 12 நிமிடங்கள் பூமி அதிர்ந்தது என்று ஜெர்மன் புவியியலுக்கான ஆராய்ச்சி மையம் (ஜி.எஃப்.இசட்) தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
எனினும் நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.