Home இலங்கைகருவி நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி மோசடி – மாற்று திறனாளிகள் கவலை!

கருவி நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி மோசடி – மாற்று திறனாளிகள் கவலை!

by admin
மாற்று திறனாளிகளின் கருவி நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி பலர் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என கருவி நிறுவனத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.
யாழ், ஊடக அமையத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர்.
மேலும் தெரிவிக்கையில்,
மாற்றுத் திறனாளிகளான நாம் ஏனைய பிரஜைகள் போன்று, இந்நாட்டின் பிரஜைகளே  சகலதும் பெற்று உறுதியாக வாழ வேண்டும். ஆனால் எமது நட்டில் அத்தகைய ஒரு நிலையான பொறிமுறை இல்லாதுள்ளது.

பாடசாலைகள், தொழில் இடங்கள், திணைக்களங்கள் , பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட இடங்களில் அல்லது சேவை பெறும் இடங்களில் நாளாந்தம் பல்வேறு இடர்பாடுகளை சந்திக்க நேரிடுகிறது.

இதில் பொதுப் போக்குவரத்தில் அதிகளவு இடர்பாடுகள் ஏற்படுகின்றது. இதை குறித்த சேவை வழங்குநர்களே எமது நிலைமையை உணர்ந்து, உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து தீர்வுகளை தரவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

குறிப்பாக சமூக சேவைகள் அதிகாரிகள் இதில் அதிக அக்கறை எடுத்து பொறிமுறையை உருவாக்கி சேவையை நாம் இலகுவாகவும் மனித நேயத்துடன் பெற்றுக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும் எமது வருமான ஈட்டல் மற்றும் பொருளாதாரத்துக்காக நாம் கருவி நிறுவனத்தின் ஊடாக பல உற்பத்திப் பொருட்களை செய்து சந்தைப்படுத்தி வருகின்றோம். அதற்காக எமது மாற்றுத்திறனாளிகள்  பலர்  வெளிக்கள பணிகளில் ஈடுபடுகின்றனர்.

அந்நிலையில் தற்போது எமது கருவி நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி பலர் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இந்த மோசடிகளை மக்கள் விழிப்புடன் எதிர்கொண்டு எமது வாழ்வியலை வலுப்படுத்த வேண்டும் என மேலும் கேட்டு கொண்டனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More