ஜப்பானின் தென்மேற்கு ஒய்டா மாகாணத்தில் உள்ள கடற்கரை நகரமான சகனோஸ்கி நகரத்தில் உள்ள துறைமுகத்தில் நேற்று திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் 170 கட்டிடங்கள் எாிந்து அழிந்துள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளாா் என தொிவிக்கப்பட்டுள்ளது . விரைவாக பற்றி எரிந்த தீ, ஏனைய கட்டிடங்களுக்கும் வேகமாகப் பரவியதுடன் அருகே உள்ள மீனவர்களின் வீடுகளுக்கும் பரவியதாக தொிவிக்கப்படுகின்றது.
இதற்காக துறைமுகம் அமைத்துள்ள பகுதியில் பிடிக்கப்படும் சாளை வகை மீன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மீன்களை உறைய வைக்க, பதப்படுத்த கிடங்குகள் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்ற நிலையில் துறைமுகத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது
தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் வாகனங்கள் மற்றும் உலங்குவானூா்திகளில் சென்று நீண்ட போராட்டத்தின் பின்னா் தீயை அணைக்கதுள்ளனா். இந்த தீவிபத்தில் 170 கட்டிடங்கள் தீயில் எரிந்து அழிந்துள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளாா் எனத் தொிவிக்கப்பட்டள்ளது

