குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

அங்குனுகொல பெலஸ்ஸ என்னும் பகுதியில ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். 60 வயதான தந்தையும், 25 வயதான மகனும் இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளதுடன் குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பாரிய வெட்டுக் காயங்களுக்கு உள்ளான 60 வயதான நபரின் மனைவி மற்றும் மற்றுமொரு மகன் ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Add Comment