Home இலங்கை நேவி சம்பத் தப்பிச் செல்ல முன்னாள் கடற்படைத்தளபதி பணம் வழங்கினார்..

நேவி சம்பத் தப்பிச் செல்ல முன்னாள் கடற்படைத்தளபதி பணம் வழங்கினார்..

by admin


கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவத்தின் பிரதான காரண கர்த்தாவாகிய நேவி சம்பத் தலைமறைவாகயிருப்பதற்கு முன்னாள் கடற்படை தளபதியும் முப்படைகளின் பிரதானியுமான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ண பணம் வழங்கியிருந்தார் என குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று கைதுசெய்யப்பட்ட நேவி சம்பத் இன்று நீதிமன்றத்தில ஆஜர் செய்யப்பட்டவேளை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இதனை தெரிவித்துள்ளனர்.முப்படைகளின் பிரதானி, கடற்படை தளபதியாகயிருந்தவேளை நேவி சம்பத் தப்பிச்செல்வதற்கு உதவினார் என்பதற்கான வலுவான ஆதாரங்கள் தம்மி்டம் உள்ளன என குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து கடந்த வருடம் காவற்துறையினரிடமிருந்து தப்புவதற்காக நேவிசம்பத்திற்கு 500,000 ரூபாய் கடற்படையின் வங்கிக்கணக்கிலிருந்து வழங்கப்பட்டது தொடர்பிலான விபரங்களை சமர்ப்பிக்குமாறு இலங்கை வங்கிக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த வருடம் மார்ச்மாதத்திற்கும் மே மாதத்திற்கும் இடையில் இடம்பெற்ற வங்கிபரிவர்த்தனைகள் தொடர்பான விபரங்களை பகிரங்கப்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். மேலும் சந்தேகநபரை தொடர்ந்து விசாரணை செய்யுமாறும் உத்தரவிட்டுள்ள நீதவான் சந்தேகநபர் வெளிநாடு தப்பிச்செல்வதற்கு உதவிய நபர்கள் குறித்த விசாரணைகளைமேற்கொள்ளுமாறும் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ் இளைஞர்களின் தூக்கத்தை கலைத்த நேவி சம்பத்துக்கு விளக்கமறியல்..

11 தமிழ் இளைஞர்களை கடத்தி, காணாமல் ஆக்கிய நேவி சம்பத் கைதானார்..

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More