Home இந்தியா குஜராத்தில் மாணவர்களிடையே ஏற்பட்ட சிறிய தகராறு மதச்சண்டையாக மாறியதில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர்

குஜராத்தில் மாணவர்களிடையே ஏற்பட்ட சிறிய தகராறு மதச்சண்டையாக மாறியதில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர்

by admin


இந்தியாவின் குஜராத்தில் மாணவர்களிடையே ஏற்பட்ட சிறிய தகராறு மதச்சண்டையாக மாறியதில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 50 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தீவைக்கப்பட்டுமுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

கிராமம் ஒன்றில்  10-ஆம் வகுப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதமானது  சுற்றியுள்ள 3 கிராமங்களுக்கு பரவி மதக்கலவரமாக வெடித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.  இதனைத் தொடர்ந்து வீடுகளுக்கும் வாகனங்களுக்கும்  தீவைக்கப்பட்டதாகவும்  நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர காவல்துறையினர்  கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியதுடன்  ஒரு கட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய நிலையும் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவங்களில் 2 பேர் கொல்லப்பட்டதுடன் 10 பேர் காயமடைந்ததாகவும்  இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More