Home இந்தியா முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பில் உச்சநீதிமன்றம் கேரளாவுக்கு கடிதம்

முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பில் உச்சநீதிமன்றம் கேரளாவுக்கு கடிதம்

by admin

முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம்  கேரளாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. முல்லை பெரியாறு அணையின் பராமரிப்பு பணிக்கு கேரள அரசு இடையூறு செய்வதாக உச்சநீதிமன்றில்  தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கேரளாவிற்கு கடதம் அனுப்ப உத்தரவிட்டு ஜூலை 2வது வாரத்திற்கு வழக்கை ஒத்திவைத்துள்ளது.

தமிழக அரசு சட்டப்போராட்டம் நடத்தி முல்லை பெரியாறு அணை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்த அனுமதி பெறப்பட்டது. அதற்குப் பின்னர் 142 அடியிலிருந்து 152 அடியாக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு  7.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, கேரள அரசு அதற்கு முழு ஒத்துழைப்பு தரவில்லை எனவும்  அதனால் பணிகளில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தனது மனுவில் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More