Home இந்தியா இமாசலபிரதேச மாநிலத்தில் கனமழை காரணமாக தொழிற்சாலையின் சுவர் இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழப்பு

இமாசலபிரதேச மாநிலத்தில் கனமழை காரணமாக தொழிற்சாலையின் சுவர் இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழப்பு

by admin


இமாசலபிரதேச மாநிலத்தில் நேற்று இடியுடன் கூடிய கனமழை காரணமாக தொழிற்சாலையின் சுவர் இடிந்து விழுந்ததில்  4 சிறுவர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

கனமழையுடன் பலத்த புயல் காற்றும் வீசியதனால் அங்கு உள்ள பல்வேறு மாவட்டங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளதாகவும்  பல இடங்களில் பயங்கரமான நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் தொழிற்சாலை ஒன்றின் மிகப்பெரிய சுவர் இடிந்து விழுந்ததில் தொழிற்சாலைக்குள் தூங்கிக்கொண்டிருந்த ஊழியர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

மீட்பு படையினர்  மீட்புபணியில் ஈடுபட்டுள்ள நிலையில் 8 பேரில் உடல்களை எடுத்ததாகவும் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 15 பேர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More