Home உலகம் பலஸ்தீனர்களுக்கு உதவி வழங்கும் ஐ.நா தொண்டு நிறுவனத்தை கலைக்க வேண்டுமென இஸ்ரேல் கோரிக்கை

பலஸ்தீனர்களுக்கு உதவி வழங்கும் ஐ.நா தொண்டு நிறுவனத்தை கலைக்க வேண்டுமென இஸ்ரேல் கோரிக்கை

by admin


பலஸ்தீன மக்களுக்கு உதவி வழங்கி வரும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் தொண்டு நிறுவனத்தை கலைக்க வேண்டுமென இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெட்டன்யாகூ கோரியுள்ளார்.

United Nations Relief and Works Agency (UNRWA)   என்ற நிறுவனம் மீது இஸ்ரேல் பிரதமர் நேரடியாக தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். பல மில்லியன் பலஸ்தீன மக்களுக்கு இந்த தொண்டு நிறுவனம் உதவிகளை வழங்கி வருகின்றது.

இந்த நிறுவனம் உண்மையில் பலஸ்தீனர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதனை விடவும், இஸ்ரேலிய எதிர்ப்பு நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்து வருவதாக அவர்  குற்றம் சுமத்தியுள்ளார். இந்த நிறுவனத்தை கலைத்து விட்டு இந்த நிறுவனத்தின் பணிகள் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென பிரதமர்  நெட்டன்யாகூ கோரியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More