Home இலங்கை காணாமல் போனோர் அலுவலகம் படைவீரர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் – மஹிந்த ராஜபக்ஸ

காணாமல் போனோர் அலுவலகம் படைவீரர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் – மஹிந்த ராஜபக்ஸ

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காணாமல் போனோர் குறித்த அலுவலகம் படைவீரர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நாட்டின் படையினருக்கு இந்த அலுவலகம் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என மாநாயக்க தேரர்களிடம் கூறியுள்ள அவர் அலுவலகம் என்ற பெயரில் இயங்கினாலும் இது முறைப்பாடுகளை ஏற்றுக் கொண்டு விசாரணை நடத்தவும், சாட்சியங்களிடமிருந்து சாட்சியங்களை திரட்டவும் கூடிய வகையில்   இயங்கும் என   குறிப்பிட்டுள்ளார்.

இந்த அலுவலகத்திற்கு வெளிநாட்டு நிறுவனங்கள் நிதி உதவி வழங்கும் என   தெரிவித்துள்ள மகிந்த யுத்த வெற்றிக்கு தலைமை தாங்கிய அரசியல் தலைமைகள் மற்றும் படைவீரர்களை தண்டிக்கும் நோக்கில் இந்த அலுவலகம் உருவாக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More