Home இலங்கை முன்னாள் சிரேஷ் காவல்துறை மா அதிபர் லலித் ஜயசிங்க மீண்டும் கைது:-

முன்னாள் சிரேஷ் காவல்துறை மா அதிபர் லலித் ஜயசிங்க மீண்டும் கைது:-

by admin

முன்னாள் சிரேஷ் காவல்துறை மா அதிபர் லலித் ஜயசிங்க கைது செய்யப்பட்டு, அவரிடம் தற்போது விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு முன்னாள் பிரதியமைச்சர் ஜயசேகர உள்ளிட்ட குழுவினர். நபரொருவரை துப்பாக்கியால் சுட்டு, படுகொலை செய்த சம்பவம் தொடர்பிலான விசாரணையின் போது. சில விடயங்களை மறைத்தார் என்ற குற்றச்சாட்டு தொடர்பிலேயே விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

புங்குடுதீவு மாணவி படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்களில் ஒருவரான சுவிஸ் குமார் என்பவர் தப்பிச் செல்ல உதவியதாக குற்றம் சுமத்தப்பட்டு. தேசிய காவல்துறை ஆணைக்குழுவினால் லலித் ஜயசிங்கவின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More