Home இலங்கை இந்திய மீனவர்கள் 23 பேர் கடற்படையினரால் கைது

இந்திய மீனவர்கள் 23 பேர் கடற்படையினரால் கைது

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 23 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டடுள்ளர். நெடுந்தீவுக் கடற்பரப்பில் 5 பபடகுகளில் வந்து தொழிலில் ஈடுபட்ட போதே 23 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டனர் என கடற்படையினர் தெரிவித்தனர்.

அவர்களின் 5 படகுகளும் காங்கேசன்துறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன.  மலேரியா தொற்றுத் தொடர்பில் கடற்படை மருத்துவர்களால் சோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னர் 23 இந்திய மீனவர்களும் இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More