Home இந்தியா 18 சட்ட மன்ற உறுப்பினர்களை பதவி நீக்கிய வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 7ஆம் திகதி! 

18 சட்ட மன்ற உறுப்பினர்களை பதவி நீக்கிய வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 7ஆம் திகதி! 

by admin

அம்மா முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர் தினகரனின் அணிக்கு தாவிய 18 தமிழக சட்டமன்ற உறுப்பினர்களை பதவி நீக்க வேண்டும் என தொடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பை வரும் மே மாதம்  7ஆம் திகதி நீதிபதிகள் பிறப்பிக்க உள்ளனர்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த முதல் – அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் ஒன்றாக இணைந்தமைக்கு  டி.டி.வி. தினகரன் எதிர்ப்பு தெரிவித்து தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுடன் தனியாக செயற்பட்டு வந்தார்.

இதையடுத்து தினகரனும் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். அவருடன் 18 சட்டமன்ற உறுப்பினர்களும் சென்றனர். அவர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று தமிழக ஆளுநரை சந்தித்து கடிதம் அளித்தனர். அதில் எடப்பாடி பழனிசாமிக்கு தாங்கள் அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாகவும் தெரிவித்து இருந்தனர்.

18 பேரும் கட்சியின்  கொறடா உத்தரவு இல்லாமல் தன்னிச்சையாக ஆளுநரிடம் மனு அளித்ததால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன் கடிதம் கொடுத்தார். இதனை தொடர்ந்து தினகரன் ஆதரவாளர்களான தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்பட 18 சட்டமன்ற உறுப்பிர்களை பதவி நீக்கம் செய்ய தமிழக சட்டமன்ற சபாநாயகர் தனபால் உத்தரவு பிறப்பித்தார்.

இதை எதிர்த்து 18 சட்டமன்ற உறுப்பிர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் விசாரணை செய்து வந்தனர்.  கோடை விடுமுறையில் இந்த வழக்கின் தீர்ப்பை பிறப்பிக்க நீதிபதிகள் முடிவு செய்துள்ளனர். அதன்படி வரும் மே ஆம் திகதி இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் பிறப்பிக்க உள்ளனர்.
Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More