Home இலங்கை மாத்தறை துப்பாக்கிச் சண்டையில் காயமடைந்த காவல்துறை உத்தியோகத்தர் உயிரிழப்பு – கொள்ளையர் மூவர் கைது

மாத்தறை துப்பாக்கிச் சண்டையில் காயமடைந்த காவல்துறை உத்தியோகத்தர் உயிரிழப்பு – கொள்ளையர் மூவர் கைது

by admin

மாத்தறையில் ஆபரணக் கடையில் கொள்ளையடிக்க முயன்ற கொள்ளை கொள்ளைக்காரர்களும் காவல்துறையினருக்கும் இடையில் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த காவல்துறை உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் இந்த சம்பவத்தின் போது சம்பவத்தில் காயமடைந்த மூன்று கொள்ளையர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர்களில் ஒருவர் தேடப்பட்டு வந்த கொஸ்கொட தாரக என்று அடையாளம் காணப்பட்டுள்ளார் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொஸ்கொட தாரக பல கொலை மற்றும் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபரர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மாத்தறையில் காவல்துறையினருக்கும் கொள்ளையர்க்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை…

un 22, 2018 @ 04:59

மாத்தறை நகரத்தில்  காவல்துறையினருக்கும்  கொள்ளைக்காரர்களும்  இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 03   காவல்துறையினரும் ஏனைய இருவரும்   காயமடைந்துள்ளதாக  காவல்துறை  ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர  தெரிவித்துள்ளார்;.

காயமடைந்தவர்களில்; ஒருவரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மாத்தறை நகர பிரதேசத்தில் உள்ள தங்க ஆபரண விற்பனை நிலையம் ஒன்றில் இன்று காலை கொள்ளச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும் இது தொடர்பில் தகவல் வழங்கப்பட்டதையடுத்து அங்கு  சென்ற  காவல்துறையினருக்கும்   கொள்ளையர்களுக்கும் இடையில் இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும்  காவல்துறை  ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More