Home இலங்கை சுழிபுரம் மாணவி கொலையை கண்டித்து இடம்பெற்ற போராட்டத்தில் அரசியல் தலைவர்கள் பங்கேற்பு

சுழிபுரம் மாணவி கொலையை கண்டித்து இடம்பெற்ற போராட்டத்தில் அரசியல் தலைவர்கள் பங்கேற்பு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சுழிபுரத்தில் பாடசாலை மாணவி படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் அரசியல் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். மாணவியின் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் நீதியை வலியுறுத்தியும் மாணவர்களும் பொது மக்களும் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆயினும் இந்தப் போராட்டத்தில் அரசியல்வாதிகள் எவரும் கலந்து கொள்ளவில்லையென பலத்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் சுழிபுரம் சந்தியில் இன்று காலை நடைபெற்ற வீதி மறியல் போராட்டத்தில் அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் மாகாண சபை உறுப்பிர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More