Home பிரதான செய்திகள் நேரம் வரும்போது ஓய்வு குறித்து அறிவிப்பேன் – லசித் மலிங்க

நேரம் வரும்போது ஓய்வு குறித்து அறிவிப்பேன் – லசித் மலிங்க

by admin


நேரம் வரும்போது ஓய்வு பெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் லசித் மலிங்க தெரிவித்துள்ளார். கடந்த வருடம் இலங்கை அணிக்காக இறுதியாக விளையாடிய லசித் மலிங்க , தென்னாபிரிக்காவுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் இலங்கை அணியில் சேர்த்துக் கொள்ளாமையினால் அவர் ஓய்வு குறித்து அறிவிப்பு வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் ஆடுகள பராமரிப்பாளர்களை தான் கடந்தாண்டு விமர்சித்தமைதான் , தான் அணியில் சேர்த்துக் கொள்ளாமைக்கான காரணமாக இருக்கலாம் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தனது வெளிப்படையான நேரடியாகப் பேசும் தன்மையையும் தான் அணியில் தேர்வு செய்யப்படாமலிருப்பதற்கான காரணங்களாக இருக்கலாமெனவும் லசித் மலிங்க சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More