Home இலங்கை கட்டுத்துவக்கு -வாள் – கசிப்பு வீட்டில் வைத்திருந்தவருக்கு விளக்கமறியல்

கட்டுத்துவக்கு -வாள் – கசிப்பு வீட்டில் வைத்திருந்தவருக்கு விளக்கமறியல்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கட்டுத்துவக்கு, வாள் மற்றும் கசிப்பு என்பவற்றை வீட்டில்வைத்திருந்த நபர் ஒருவரை பளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

யாழ்.உடுத்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் கசிப்பு உற்பத்தி நடைபெறுவதாக பளை காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அவ்விடத்திற்கு சென்ற காவல்துறையினர்; குறித்த வீட்டை சுற்றி வளைத்து தேடுதல் நடத்தியுள்ளனர்.

அதன் போது ஒரு தொகை கசிப்பு , கட்டுத்துவக்கு மற்றும் வாள் என்பவற்றை வீட்டில் இருந்து காவல்துறையினர் மீட்டதுடன் வீட்டில் இருந்த நபரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரையும் மீட்கப்பட்ட பொருட்களையும் காவல்துறையினர் கிளிநொச்சி நீதிமன்றில் பரப்படுத்தியதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து சந்தேக நபரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More