Home உலகம் தனியாரின் பங்களிப்புடன் அனுப்பிய விண்கலம், நிலவின் பரப்பில் மோதியது..

தனியாரின் பங்களிப்புடன் அனுப்பிய விண்கலம், நிலவின் பரப்பில் மோதியது..

by admin

உலகில் முதல் முறையாக தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட விண்கலம் நிலவின் பரப்பில் மோதி சேதமடைந்துள்ளது.

நிலவின் பரப்பில் தரையிறங்கி புகைப்படங்களை எடுப்பதுடன் பல்வேறு பரிசோதனைகளை மேற்கொள்வதற்காகவும் இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட பேரேஷீட் என்னும் அந்த விண்கலம் நிலவின் பரப்பை தொடுவதற்கு முன்னதாக ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனைகளின் காரணமாக தரையில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் சோவியத் ரஸ்யா ,அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் அரசுத்துறைகளின் கட்டுப்பாட்டிலுள்ள விண்வெளி ஆராய்ச்சி நிலையங்களின் விண்கலன்களே நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ள நிலையில் நிலவின் மேற்பரப்பை அடைந்த நான்காவது நாடு என்னும் பெருமையை அடைவதற்கு இஸ்ரேல் திட்டமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More