Home இலங்கை 2ஆம் இணைப்பு – பாதகம் ஏற்பாட்டாலே தடை..

2ஆம் இணைப்பு – பாதகம் ஏற்பாட்டாலே தடை..

by admin

யாழ்.மாநகர சபை மைதானத்தில் நடைபெறவிருந்த மத நிகழ்வுக்கு தாம் தடை விதிக்கவில்லை எனவும் குறித்த நிகழ்வு மத நல்லிணக்கத்திற்கு பாதகமாக முன்னெடுக்கப்பட்டாலே தடை விதிக்கப்படும் எனவும் பொலிஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

அது குறித்து பொலிஸ் தரப்பினர் தெரிவிக்கையில் ,

மாநகர சபை மைதானத்தில் இன்று திங்கட்கிழமை முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மத நிகழ்வொன்று ஏற்பாடு செய்யபட்டு இருந்தது.

அந்நிலையில் குறித்த மத நிகழ்வானது ஏனைய மதங்களை இழிவு படுத்தும் நிகழ்வாகும். இதேபோன்று சில தினங்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் நடத்தப்பட்டது. அதில் சிவன் மற்றும் புத்தர் ஆகியோரை சாத்தான்கள் என கூறப்பட்டது. அவ்வாறு ஏனைய மத கடவுள்களை சாத்தான்கள் என கூறுவது, அந்த மதம் சார்ந்தவர்களை கோபமடைய செய்யும் செயற்பாடு. இந்தியாவில் இருந்து சுற்றுலா விசாவில் வந்த மூவரே இந்த நிகழ்வை நடத்துகின்றனர் அதனால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என சிவ சேனை அமைப்பின் தலைவர் மறவன் புலவு சச்சிதானந்தன் வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபரை நேரில் சந்தித்து முறையிட்டுள்ளார்.

அது தொடர்பில் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் யாழ்.பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரியுடன் பேசியுள்ளார். அதன் போது பொறுப்பதிகாரி குறித்த நிகழ்வுக்கு தாம் ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் , குறித்த மத நிகழ்வில் ஏனைய மதங்களுக்கு எதிராக கருத்து தெரிவிப்பது , ஏனைய மதங்களை இழிவு படுத்துதல் போன்ற மத நல்லிணக்கத்திற்கு பாதகம் ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட வேண்டாம் என ஏற்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்துமாறும் , அவ்வாறு மத நல்லிணக்கத்திற்கு பாதகம் ஏற்படுத்தும் வகையில் குறித்த மத நிகழ்வு நடத்தப்பட்டால் நீதிமன்றை நாடி உடனடியாக அது தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பொறுப்பதிகாரிக்கு அறிவுறுத்தியுள்ளார். என பொலிஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

சிவனையும் புத்தரையும், சாத்தான்கள் எனும் மத நிகழ்வுக்குத் தடை…

யாழ்.மாநகர சபை மைதானத்தில் நடைபெறவிருந்த மத நிகழ்வுக்கு யாழ்ப்பாண காவற்துறையினர் தடை விதித்துள்ளனர். மாநகர சபை மைதானத்தில் இன்று திங்கட்கிழமை முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மத நிகழ்வொன்று ஏற்பாடு செய்யபட்டு இருந்தது.

குறித்த மத நிகழ்வானது ஏனைய மதங்களை இழிவு படுத்தும் நிகழ்வு எனவும் , அதனால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என சிவ சேனை அமைப்பின் தலைவர் மறவன் புலவு சச்சிதானந்தன் யாழ்பாண காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

குறித்த முறைப்பாட்டில் , குறித்த மத நிகழ்வு சில தினங்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் நடத்தப்பட்டது. அதில் சிவன் மற்றும் புத்தர் ஆகியோரை சாத்தான்கள் என கூறப்பட்டது. அதற்கான காணொளி ஆதாரம் உண்டு (முறைப்பட்டாளரால் காவற்துறையினரிடம் அது ஒப்படைக்கப்பட்டது அவ்வாறு ஏனைய மத கடவுள்களை சாத்தான்கள் என கூறுவது, அந்த மதம் சார்ந்தவர்களை கோபமடைய செய்யும் செயற்பாடு. இந்தியாவில் இருந்து சுற்றுலா விசாவில் வந்த மூவரே இந்த நிகழ்வை நடத்துகின்றனர். என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அவற்றை ஆராய்ந்த காவற்துறையினர் குறித்த நிகழ்வை நடாத்துவதை நிறுத்துமாறு ஏற்பாட்டாளர்களுக்கு அறிவித்துள்ளனர்.

அதேவேளை குறித்த மத நிகழ்வு எதிர்வரும் 29ஆம் திகதி கிழக்கு மாகாணத்தில் கல்முனை பிரதேசத்திலும் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More