Home இலங்கை சுகபோகங்களை ஒப்படைக்குமாறு முன்னாள் உறுப்பினர்களுக்கு உத்தரவு…

சுகபோகங்களை ஒப்படைக்குமாறு முன்னாள் உறுப்பினர்களுக்கு உத்தரவு…

by admin


முன்னாள் இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்திய உத்தியோகபூர்வ வாகனங்கள் மற்றும் வாசஸ்தலங்களை எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் கையளிக்குமாறு பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டதைத் தொடர்ந்து, இந்த விடயம் தொடர்பில் அனைத்து இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டதாக அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வ வாகனங்கள் மற்றும் வாசஸ்தலங்களை உரிய காலத்திற்குள் ஒப்படைக்கப்படாத பட்சத்தில், எதிர்கால நடவடிக்கைகளுக்கு பாதிப்பு எற்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, கடந்த அரசாங்க காலத்தில் பதவி வகித்த முன்னாள் அமைச்சர்கள் சிலர், இதுவரை உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களை ஒப்படைக்கவில்லை என அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

எட்டாவது நாடாளுமன்றம் நேற்று (02) நள்ளிரவுடன் கலைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More