நேற்றையதினம் மேலும் 39 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. கொரோனா தொற்றினால் மூவர் நேற்று உயிரிழந்துள்ளதாகவும் ஏனைய 36 மரணங்களும் ஏப்ரல் 29 ஆம் திகதி தொடக்கம் கடந்த 27 ஆம் திகதி வரை பதிவானதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளாா்.
அதற்கமைய, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,363 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது