தென்னாப்பிரிக்காவில் 35-க்கு மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு 1088 ஆண்டுகள் சிறை தண்டனையும் 5 ஆயுள் தண்டனையும் அந்நாட்டின் பிரிட்டோரியா உயர்நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையில் 33 வயதான செல்லோ அப்ரம் மாபுன்யா என்ற குறித்த குற்றவாளி தென்னாப்பிரிக்காவில் சுமார் 36 வீடுகளை உடைத்து கொள்ளை அடித்துள்ளதுடன் 35 பெண்களை அவர்களது குடும்பத்தினர் முன்னிலையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.