Home இலங்கை பதவி விலகல் கடிதங்கள் இரண்டை ஜனாதிபதிக்கு அனுப்பினாரம் சப்ரி!

பதவி விலகல் கடிதங்கள் இரண்டை ஜனாதிபதிக்கு அனுப்பினாரம் சப்ரி!

by admin

நீதி அமைச்சர் பதவியிலிருந்தும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகிக் கொள்வதான இரண்டு இராஜினாமாக் கடிதங்களை அலி சப்ரி அனுப்பி வைத்துள்ளார்.

அவ்விரு இராஜினாமா கடிதங்களையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஏற்றுக் கொள்ளவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரே நாடு- ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி, பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டது.

ஆனால் இந்த விஷயத்தில் தன்னிடம் எவ்விதமான ஆலோசனைகளும் பெறவில்லை என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் நாடாளுமன்ற உறுப்பினர் பதியில் இருந்து விலகுவதான கடிதம், தேர்தல் ஆணைக் குழு, சபாாயகர், பொதுஜனபெரமுன கட்சியின் தலைவர் – செயலாளர் ஆகியோருக்கே அனுப்ப வேண்டும். ஆனால் அக்கடிதமும் ஜனாதிபதிக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More