Home இலங்கை கோட்டாபய ராஜபக்ஸ மீண்டும் இலங்கை திரும்புகிறார்!

கோட்டாபய ராஜபக்ஸ மீண்டும் இலங்கை திரும்புகிறார்!

by admin

ஜனாதிபதி பதவியில் இருந்து விலகியுள்ள கோட்டாபய ராஜபக்ஸ, அடுத்த மாதம் இலங்கை திரும்புவார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இராஜினாமாவை அடுத்து, ஓய்வு பெற்றுள்ள ஜனாதிபதியின் சிறப்புரிமைகளை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பெற்றுக்கொள்ள உள்ளார் என்றும் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.

அதற்கமைய, கொழும்பில் உத்தியோகபூர்வ இல்லம், பாதுகாப்பு படை, வாகனங்கள் உள்ளிட்ட பல சலுகைகள், முன்னாள் ஜனாதிபதிக்கும் அவருடைய மனைவிக்கும் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார்.

தற்போது வெளிநாட்டில் உள்ள கோட்டாபய ராஜபக்ஸவின் கோரிக்கையின் பேரில் இந்த வசதிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை 2 வாரங்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு சிங்கப்பூர் அரசாங்கம் அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோட்டாபயவை நாட்டுக்குள் அனுமதித்தமைக்கு எதிராக சனிக்கிழமை (16.07.22) எதிர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

எனவே பாதுகாப்பு காரணங்களைக் கருத்திற் கொண்டு நாட்டை விட்டு வெளியேறுமாறு சிங்கப்பூர் அரசாங்கத்தின் அமைச்சரொருவர் கோட்டாவை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார் என்று தெரியவருகிறது.

இந்தியாவுக்கு வருவதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்த கோரிக்கையை ஏற்க இந்தியா மறுத்துவிட்டது என த ஹிந்து செய்தி ​வெளியிட்டுள்ளது.

இலங்கையில் நிலவும் பொருளாதர நெருக்கடி காரணமாக அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது மனைவியுடன் நாட்டைவிட்டு தப்பி சென்றார். அவரின் சகோதரர்களான முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும், முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவும் வெளிநாடு செல்வதற்கு இலங்கை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More