Home இலங்கை கோட்டாபய தங்கிய சிங்கப்பூர் நட்சத்திர விடுதிக்கான கட்டணத்தை நிஸங்க செலுத்தினார்?

கோட்டாபய தங்கிய சிங்கப்பூர் நட்சத்திர விடுதிக்கான கட்டணத்தை நிஸங்க செலுத்தினார்?

by admin
(ஆவண படம்)

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சிங்கப்பூரில் தங்கியிருந்த காலப்பகுதியில் நட்சத்திர விடுத்க்கான கட்டணமாக 67 மில்லியன் ரூபாவை செலுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் அவரது மனைவி அயோமா ராஜபக்ஸவும் கடந்த 11ஆம் திகதி தாய்லாந்து செல்லும் வரை சிங்கப்பூரில் உள்ள மரினா பே சாண்ட்ஸ் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தனர்.


நட்சத்திர விடுதியின் தங்குமிட கட்டணமாக செலவிடப்பட்ட 67 மில்லியன் ரூபாவை அவன்ட் கார்ட் நிறுவனத்தின் உரிமையாளர் நிஷ்ஷங்க சேனாதிபதி செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.


இதேவேளை, தற்போது தாய்லாந்தில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி, அந்நாட்டிலுள்ள மத வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வதற்கு தாய்லாந்து அரசாங்கத்திடம் அனுமதி கோரிய போதிலும், இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தங்கியிருக்கும் விடுதி வளாகத்தை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என தாய்லாந்து அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாக தாய்லாந்தின் பாங்காக் போஸ்ட் செய்தித்தாள் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தமை கறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More