மாற்றத்திற்கான இளைஞர் அமைப்பினை சேர்ந்த லஹிரு வீரசேகர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஓகஸ்ட் 30ஆம் திகதி மருதானையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது காவல்துறையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.