Home இலங்கை யாழில் இந்துமத குருமாரையும், வெளிநாட்டவர்களையும் சந்தித்தார் மைத்திரி!

யாழில் இந்துமத குருமாரையும், வெளிநாட்டவர்களையும் சந்தித்தார் மைத்திரி!

by admin
யாழில். இந்துமத குருமாரை சந்தித்த மைத்திரி!
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் வியாழக்கிழமை  யாழ்ப்பாணத்தில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அலுவலகத்தில் இந்து மத குருமாரை சந்தித்து கலந்துரையாடி இருந்தார்.
அதன் போது இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தனும் இந்து மத குருமாரின் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தார்.
 

நல்லூரில் வெளிநாட்டவர்களை சந்தித்த மைத்திரி

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் வியாழக்கிழமை நல்லூர் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டார்.

சைவ பண்பாட்டுடன் வேட்டி அணிந்து வந்த மைத்திரிபால சிறிசேன சிதறுதேங்காய் அடித்து வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன, மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் தஹாம் சிறிசேன உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

வழிபாட்டிற்கு பின்னர் ஆலயசூழலில் நின்ற முன்பள்ளி குழந்தைகள், வெளிநாட்டவர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More