Home இலங்கை வசந்த முதலிகே உள்ளிட்ட இருவர் கைது

வசந்த முதலிகே உள்ளிட்ட இருவர் கைது

by admin

 

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட இருவர் பொரளையில் வைத்து இன்று (27) மாலை  கைது செய்யப்பட்டுள்ளனர்.  2020 பெப்ரவரி 27 ஆம் திகதி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்பாக இடம்பெற்ற சட்டவிரோத கூட்டத்தில் பங்கேற்றமை, தீங்கு விளைவித்தமை, நீதிமன்ற உத்தரவை மீறியமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினரரான  இந்திக்க விதான பத்திரன என்பவரே   வசந்த முதலிகேவுடன் கைது செய்யப்பட்ட மற்றையவராவாா்.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More