Home இலங்கை யாழில். மின்னல் தாக்கத்தால் ஒருவர் காயம்!

யாழில். மின்னல் தாக்கத்தால் ஒருவர் காயம்!

தென்னை மரமொன்றும் தீ பிடித்து எரிந்தது!

by admin

யாழ்ப்பாணம் – உடுவில் பகுதியில் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி தென்னை மரம் ஒன்று தீ பற்றி எரிந்துள்ளதுடன் , நபர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கடந்த சில வாரங்களாக கடும் வெப்பமான கால நிலை நிலவி வரும் நிலையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை உடுவில் பகுதியில் இடி மின்னலுடன் மழை பொழிந்துள்ளது.

அதன் போது, மின்னல் தாக்கத்தால் வீடொன்றில் இருந்த தென்னை மரம் தீ பற்றி எரிந்துள்ளதுடன் , வீட்டில் இருந்த நபர் ஒருவரும் காயமடைந்துள்ளார். காயமடைந்தவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More