Home இலங்கை மாவீரர் தினத்தினை அனுஷ்டிக்க அனுமதி

மாவீரர் தினத்தினை அனுஷ்டிக்க அனுமதி

by admin

 

வடக்கில் உள்ள மக்கள் மாவீரர்  தினத்தினை அனுஷ்டிக்க அனுமதித்துள்ளதாக  பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.   எனினும்  தடை செய்யப்பட்ட அமைப்பான விடுதலைப் புலிகள் தொடர்பான இலச்சினைகள், சீருடைகள், படங்கள் போன்றவற்றை காட்சிப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்  என   குறிப்பிட்டுள்ள அவா்  உள்நாட்டுப் போரின் போது உயிரிழந்த தமது உறவுகளை நினைவு கூருவதை அரசாங்கம் தடுக்காது எனவும்   தெரிவித்துள்ளாா்.

எவ்வாறாயினும்  நினைவேந்தல் சட்ட விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும்  என்பதுடன்  தடைசெய்யப்பட்ட பயங்கரவாத குழுவுடன் எந்த தொடர்பும் தவிர்க்கப்பட வேண்டும் எனவும்  நினைவுகூருவதற்கான உரிமை மற்றும் நாட்டின் சட்டக் கட்டமைப்பு ஆகிய இரண்டையும் மதித்து, சட்டத்தின் எல்லைக்குள் நினைவேந்தல்களை நடத்துமாறும் அவர் வலியுறுத்தியுள்ளாா்.

மாவீரர் நினைவேந்தல் வாரத்தை குறிக்கும  நினைவேந்தல் நிகழ்வுகள்  நவம்பர் 21ஆம் திகதியிலிருந்து வடக்கு கிழக்கு முழுவதும்   ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More