252
இலங்கை கிரிக்கெட் அணி வீரர் அஷேன் பண்டார கைது செய்யப்பட்டுள்ளார். பிலியந்தலை, கொல்லமுன்ன பகுதியில் வசிக்கும் அஷேன் பண்டார, நபரொருவரின் வீடொன்றிற்குள் நுழைந்து மேற்கொண்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அஷேன் பண்டாரவின் வீட்டிற்கு அருகாமையில் உள்ளவருடன், வீதியை மறித்து கார் நிறுத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றறுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட அஷேன் பண்டார காவல்துறைப்பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் எதிர்வரும் 12 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
Spread the love