போலியான கனேடிய விசாக்களைப் பயன்படுத்தி கனடா செல்ல முயன்ற 11 இலங்கையர்களும், அவர்களை விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்ற முகவா் ஒருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடிவரவுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கனடாவுக்கு தப்பிச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற குறித்த 11 இலங்கையர்களும் 35 முதல் 40 வயதுக்கு உட்பட்ட அரசாங்க ஊழியர்கள், தொழிலதிபர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சமீபத்தில் நாடு திரும்பியவர்கள் என விசாரணைகளின் போது கண்டறியப்பட்டுள்ளது.
கொழும்பு, களுத்துறை, பதுளை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த இவர்கள் துபாய்க்கு புறப்படும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் UL-225 ஏறுவதற்காக நேற்று திங்கட்கிழமை (24) மாலை 6.40 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்துள்ளனா்.
பின் துபாயிலிருந்து கனடாவின் டொராண்டோ செல்ல திட்டமிட்டிருந்தனர் எனவும் விசாரணைகள் ஊடாக கண்டறியப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.