182
யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வடமராட்சி , அல்வாய் பகுதியை சேர்ந்த 25 வயதுடைய பிரபாகரன் பிரணவன் எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.
மந்திகை பகுதியில் கடந்த சனிக்கிழமை, இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த இளைஞனை அங்கிருந்தவர்கள் மீட்டு, மந்திகை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் , போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் திங்கட்கிழமை (07.04.25) உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை காவற்துறையினர்ர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love