Home இலங்கை வடமராட்சியில் விபத்து – இளைஞன் உயிரிழப்பு!

வடமராட்சியில் விபத்து – இளைஞன் உயிரிழப்பு!

by admin

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வடமராட்சி , அல்வாய் பகுதியை சேர்ந்த 25 வயதுடைய   பிரபாகரன் பிரணவன் எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.
மந்திகை பகுதியில் கடந்த சனிக்கிழமை, இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த இளைஞனை அங்கிருந்தவர்கள் மீட்டு, மந்திகை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் , போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் திங்கட்கிழமை (07.04.25)  உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை காவற்துறையினர்ர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More