மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட 37ஆம் கிராமத்தில் சித்திரைப் புத்தாண்டு தினமான நேற்று அதிகாலை, காட்டு யானையின் தாக்கியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளாா். நேற்று அதிகாலை வேளையில் , வீட்டு முற்றத்தில் நண்பர்களுடன் புத்தாண்டுக் கொண்டாடத்தில் ஈடுபட்டிருந்த 31 வயதுடைய இராசதுரை சசிகரன் என்பவரே இவ்வாறு யானையின் தாக்குதலுக்குள்ளாகி உயிாிழந்துள்ளாா்.
எதிர்பாராதவிதமாக வீட்டு வாசலுக்கு வந்த , யானையின் தாக்குதலுக்கு உள்ளாகஜ உயிாிழந்த இவா் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். தாக்குதலில் படுகாயமடைந்த குடும்பஸ்தரை , உறவினர்கள் உடனடியாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும் அவா் சிகிச்சை பலனின்று உயிரிழந்துள்ளா்ா. சம்பவம் தொடர்பாக வெல்லாவெளி காவல்துறையினா் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனா்.