மாத்தறை சிறைச்சாலையில் இன்று (22) பிற்பகல் இரண்டு கைதிகள் குழுக்களிடையே ஏற்பட்ட அமைதியின்மைக் கட்டுப்படுத்த சிறை அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்தாக தெரிவிக்கப்படுகிறது. அதனையடுத்து அமைதியின்மை ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மாத்தறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு கைதியை வேறு சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்ல முயன்றபோது இவ்வாறு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. ஒரு கூண்டிலிருந்து வெளியே வந்த கைதிகள் குழு ஒன்று அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பதற்றமாக நடந்து கொண்டதாகவும், நிலைமையைக் கட்டுப்படுத்த வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.