கொட்டாஞ்சேனை பகுதிக்கும் இன்று (22) மாலை 6 மணி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மட்டக்குளி, முகத்துவாரம், வெல்லம்பிட்டி,புளூமென்டல் மற்றும் கிராண்ட்பாஸ் பகுதிகளுக்கு இன்று காலை முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. #ஊரடங்கு #கொட்டாஞ்சேனை #சவேந்திரசில்வா