Home இலங்கைபயணத்தடை அமுலில் இருக்கும் போது பிறந்தநாள் கொண்டாடியவர்கள் தனிமைப்படுத்தலில்

பயணத்தடை அமுலில் இருக்கும் போது பிறந்தநாள் கொண்டாடியவர்கள் தனிமைப்படுத்தலில்

by admin

நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுலில் இருக்கும் போது , பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.  வடமராட்சி பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது , 


கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு பயண தடை அமுலில் உள்ள போது பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெறுவதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. 
அதனை உறுதிப்படுத்திக்கொள்ள நெல்லியடி காவல்துறையினருடன் சுகாதார பிரிவினர் அவ்விடத்திற்கு சென்றிருந்த போது , பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அங்கிருந்து தப்பி சென்றிருந்தனர். 

அந்நிலையில் பிறந்தநாள் கொண்டாடியவரின் , தொலைபேசியில் காணப்பட்ட கொண்டாட்ட படங்களின் அடிப்படையில் அதில் உள்ள 15 பேரை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More