இலங்கை கடற்பரப்பில் மற்றுமொரு கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரிந்தை – மகா இராவணன் கலங்கரை விளக்கத்தில் இருந்து கிழக்கு திசையில் 480 கடல்மைல்களுக்கு அப்பால் கொழும்பில் இருந்து சிங்கபூர் நோக்கி பயணித்த லைபீரியா நாட்டிற்கு சொந்தமான எம்எஸ்சி மெஸ்சினா எனும் கப்பலிலேயே இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கப்பலின் இயந்திர அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.