Home இலங்கை வெற்றிலை சாப்பட்டவருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை

வெற்றிலை சாப்பட்டவருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை

by admin

யாழ்ப்பாணம் தலைமை காவல்நிலையத்தில் வெத்திலை சாப்பிட்டவாறு கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை உத்தியோகஸ்தருக்கு எதிராக பொறுப்பதிகாரியினால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காவல்நிலைய பிரதான வாயிலில் கடமையில் ஈடுபட்டிருந்த குறித்த காவல்துறை உத்தியோகஸ்தர் வெற்றிலை சாப்பிட்டவாறு கடமையில் இருந்ததுடன் காவல் நிலையத்திற்கு வருவோரிடமும் மரியாதை குறைவாகவும் நடந்து கொண்டுள்ளார்.
அது தொடர்பில் காவல்நிலைய பொறுப்பதிகாரிக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, உடனடியாக குறித்த உத்தியோகஸ்தரை கடமையில் இருந்து நீக்கி, அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு நிர்வாக உத்தியோகஸ்தருக்கு, பொறுப்பதிகாரி பணித்துள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More