Home இலங்கை🚨   18 T-56 மகசீன்கள் – 25 தோட்டாக்களுடன்  ஓய்வுபெற்ற இராணுவ தளபதி கைது

🚨   18 T-56 மகசீன்கள் – 25 தோட்டாக்களுடன்  ஓய்வுபெற்ற இராணுவ தளபதி கைது

by admin

மினுவாங்கொடையில் 18 T-56 மகசீன்கள் மற்றும் 25 ரவுண்ட்ஸ் தோட்டாக்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற இராணுவ தளபதி குறித்த அதிரடியான தகவல்கள் வெளியாகியுள்ளன.

மினுவாங்கொடை மிரிஸ்வத்தை பகுதியில் கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற இராணுவ தளபதி ஒருவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், அவர் ‘கரந்தெனிய சுத்த’ (Karandeniya Sudda) போன்ற பாதாள உலகக் குழுக்களுடனும், அரசியல் புள்ளிகளுடனும் மிக நெருக்கமான தொடர்புகளைப் பேணி வந்தமை அம்பலமாகியுள்ளது.

குறித்த ஓய்வுபெற்ற இராணுவ தளபதி சர்வதேச ரீதியாகத் தேடப்பட்டு வந்த பாதாள உலகக் குழுத் தலைவரான ‘கரந்தெனிய சுத்த’வின் வழிகாட்டலில் செயற்பட்டுள்ளார்.

பிரபல பாதாள உலக நபர் ‘கனேமுல்ல சஞ்சீவ’ (Ganemulla Sanjeewa) கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தபோது, அவரை அழைத்துச் செல்வதற்காக இந்த ஓய்வுபெற்ற இராணுவ தளபதி அங்கு சென்றிருந்தார். எனினும், சஞ்சீவ சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டதும், இவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

வடமத்திய மாகாணத்தின் முன்னாள் பலம் வாய்ந்த அமைச்சர் ஒருவருடன் இணைந்து புதையல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இவர் ஏற்கனவே சிறை சென்றுள்ளார்.

வடமத்திய மாகாணத்திலுள்ள இராணுவ முகாம் ஒன்றிலிருந்து 3,000 T-56 தோட்டாக்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பிலும் இவர் மீது ஏற்கனவே விசாரணைகள் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

Tag Words: #Minuwangoda #SriLankaPolice #KarandeniyaSudda #GanemullaSanjeewa #UnderworldSriLanka #ArmyCaptainArrest #CrimeNews2026 #SecurityAlert

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More