Home இலங்கைஉண்மை ஆணைக்குழு விரைவில் உருவாக்கப்படும் – ஹர்ஸ டி சில்வா

உண்மை ஆணைக்குழு விரைவில் உருவாக்கப்படும் – ஹர்ஸ டி சில்வா

by admin


உண்மை ஆணைக்குழு விரைவில் உருவாக்கப்படும் என பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஸ டி சில்வா தெரிவித்துள்ளார். நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புக்கள் இலகுவானதல்ல என சுட்டிக்காட்டியுள்ள அவர் காணாமல் போனவர் அலுவலகமும் விரைவில் உருவாக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

நல்லிணக்கத்தை கூடிய விரைவில் எட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஜனநாயக நெறிமுறையில் அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும்  தெரிவித்துள்ளார். சர்வதேச சமூகம் இலங்கை மீது அழுத்தங்கள் பிரயோகிக்கவில்லை எனவும், சில சிங்கள , தமிழ் கடும்போக்காளர்கள் இனவாதத்தை விதைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்  குறிப்பிட்டுள்ளார். நல்லிணக்கத்தை சீர்குலைக்க வேண்டும் என்ற முனைப்புக்களில் சில தரப்பினர் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More