குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-

50 உத்தியோகத்தர்களுக்கு நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு அழைப்பு விடுத்துள்ளது.
அரசாங்கம் மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த 50 அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளனர்.
நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை நடாத்த இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி செயலகம், சுற்றுலாச்சபை, சுற்றுலாத்துறை அமைச்சு, இலங்கை மின்சாரசபை, கால்பந்தாட்ட பேரவை, கார்ல்டன் ஸ்போர்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளனர்.
Spread the love
Add Comment