Home உலகம் வட- தென்கொரிய ராணுவ அதிகாரிகளை சந்திக்க செஞ்சிலுவை சங்கம் தீவிர முயற்சி:-

வட- தென்கொரிய ராணுவ அதிகாரிகளை சந்திக்க செஞ்சிலுவை சங்கம் தீவிர முயற்சி:-

by admin

வட- தென்கொரிய ராணுவ அதிகாரிகளை எதிர்வரும் முதலாம் சந்தித்து பேச்சுலவார்த்தைகளை மேற்கொள்வதற்கு செஞ்சிலுவை சங்கம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் அன், தென்கொரியாவுடன் மோதல் போக்கை கையாண்டு வருவதுடன் அணுகுண்டு, நவீன ஏவுகணை சோதனைகளை நடத்தி, தென்கொரியாவுக்கும் அதற்கு நட்பு நாடான அமெரிக்காவுக்கும் அச்சுறுத்தில் விடுத்து வருகின்றதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நிலவுகிறது.

கடந்த மே மாதம் தென்கொரியாவின் புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்ற மூன் ஜே-இன் போர் பதற்றத்தை தணித்து இரு நாடுகளும் அமைதி காண நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் 1950-53-ம் ஆண்டுகளில் கொரிய போர் காரணமாக பிரிந்த பல லட்சம் குடும்பத்தினரை மீண்டும் ஒன்று சேர்ப்பதற்கான முயற்சியை செஞ்சிலுவை சங்கம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இதையடுத்து வட-தென்கொரிய நாடுகளின் ராணுவ அதிகாரிகள் சந்தித்து பேசுவதற்கான வாய்ப்பும் உருவாகி இருக்கிறது.

இதை பயன்படுத்திக் கொண்டு எதிர்வரும் 21ம்திகதி இரு நாடுகளின் எல்லையில் உள்ள சமாதான கிராமத்தில் இரு தரப்பு ராணுவ அதிகாரிகளின் கூட்டத்தை வைத்துக் கொள்ளலாம் என தென்கொரிய ராணுவ அமைச்சகம் செஞ்சிலுவை சங்கத்திடம் பரிந்துரை செய்துள்ளது.

இந்தநிலையில் தென்கொரிய ராணுவ அமைச்சகம் ஒப்புக் கொண்டுள்ள அதே கிராமத்தில் எதிர்வரும் முதலாம் திகதி இரு தரப்பு பேச்சுவார்த்தையையும் வைத்துக் கொள்ளலாம் என செஞ்சிலுவை சங்கம் தென்கொரியாவை கேட்டுக்கொண்டு உள்ளது.

இதேவேளை தங்களது முயற்சிக்கு வடகொரியா சாதகமான பதிலை அளிக்கும் என்று எதிர்பார்க்கிறோம் எனவும் இந்த பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி நடந்துவிட்டால் பிரிந்துபோன லட்சக்கணக்கான குடும்பத்தினரை மீண்டும் ஒன்று சேர்க்கும் பணி வருகிற ஒக்டோபர் மாதம் முதல் ஆரம்பமாகிவிடும் என தென்கொரிய செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More