Home இலங்கை காத்தான்குடி 05 நாட்களுக்கு முடக்கம்

காத்தான்குடி 05 நாட்களுக்கு முடக்கம்

by admin

காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவு இன்று(31) முதல் எதிர்வரும் ஐந்து நாட்களுக்கு முடக்கப்படுவதாக,  மட்டக்களப்பு மாவட்ட  அரசாங்க அதிபர் கே. கருணாகரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு நகர் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் கடமையாற்றும் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு நேற்றையதினம் மேற்கொள்ளப்பட்ட 549 துாித அன்டிஜன் பரிசோதனையின் போது, 26 பேர் கொரோனா தொற்றாளர்களாக கண்டறியப்பட்டுள்ளனர்.

இவர்களில் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 23 நபர்களும், ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும்,  மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த இருவரும் உள்ளடங்குவதுடன் காத்தான்குடி பிரதேசத்தின் பல பாகங்களிலும் மேற்கொள்ளப்பட்ட 665 துாித அன்டிஜன் பரிசோதனைகளின்போது 27 போ் தொற்றாளா்களாக இனங்காணப்பட்டதனையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவா் தொிவித்துள்ளாா். #காத்தான்குடி #முடக்கம் #மட்டக்களப்பு #கொரோனா #அன்டிஜன்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More