Home இலங்கை இலங்கை மீனவர்கள் 5 பேர்   இந்திய கடற்படையினரால் கைது.

இலங்கை மீனவர்கள் 5 பேர்   இந்திய கடற்படையினரால் கைது.

by admin


எல்லை தாண்டி மீன்பிடித்து கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 5 பேரை இந்திய கடற்படையினர் இன்று ஞாயிற்றுக்கிழமை (16) காலை  கைது செய்ததோடு அவர்கள் மீன் பிடியில் ஈடுபட்ட    படகு ஒன்றும்  பறிமுதல் செய்யப்பட்டது.

 

  நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த மார்க்ஸ் ஜூட் மாஸ்டர் , ஆண்டனி ஹேமா நிஷாந்தன் , இம்மானுவேல் நிக்சன் ,துருவந்தா ஸ்ரீலால், சுதீஷ் சியான் உள்ளிட்ட 5 இலங்கை மீனவர்களையே இவ்வாறு இந்திய கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இலங்கை மீனவா்கள்   விசாரணைக்காக தூத்துக்குடி தருவைகுளம் கடற்கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் கடலோர காவல் படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More