Home இலங்கை யாழில் வாள்களை உருவாக்கியவர் மறியலில்

யாழில் வாள்களை உருவாக்கியவர் மறியலில்

by admin

 

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியில் வாள் செய்து கொண்டிருந்த குற்றச்சாட்டில் கைதானவர்களில் ஒருவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில்  வைக்க மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டதுடன் , மற்றுமொரு நபரை பிணையில் செல்ல அனுமதித்தது.

காங்கேசன்துறை  காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீடொன்றில் வைத்து வாள் செய்து கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் வீட்டினை சுற்றி வளைத்து தேடுதல் நடத்தினர்.

அதன் போது வாள் செய்து கொண்டிருந்த நால்வரை கைது செய்து காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்தனர். காவல்துறையினர் விசாரணையின் பின்னர் இருவரை விடுவித்தனர். ஏனைய இருவரையும்,  இன்றைய தினம் வியாழக்கிழமை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் அடிப்படையில், ஒருவரை பிணையில் செல்ல அனுமதித்த மன்று , மற்றையவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More