Home இலங்கைஉடுவிலில் 7 வீடுகளை உடைத்து திருடிய மூவர் கைது

உடுவிலில் 7 வீடுகளை உடைத்து திருடிய மூவர் கைது

by admin

உடுவிலில் மருத்துவர் உட்பட அரச உத்தியோகத்தர்களின் வீடுகளை உடைத்து திருடிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும், சந்தேக நபர்களிடமிருந்து சமையல் எரிவாயு சிலிண்டர்கள் , வீட்டுத் தளபாடங்கள் உள்ளிட்ட பெறுமதியான பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன என்று காவல்துறையினா் தெரிவித்துள்ளனர். 


மூளாய் மற்றும் அளவெட்டியைச் சேர்ந்த மூவரே இன்று இவ்வாறு செய்யப்பட்டுள்ளனர் . 
அரச உத்தியோகத்தர்கள் வீட்டைப் பூட்டிவிட்டு பணிக்குச் செல்லும் வேளையில் கடந்த சில நாள்களாக பட்டப்பகலில் வீடுடைத்து திருட்டுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன . 


அவ்வாறு 7 வீடுகள் உடைத்து திருட்டுப் போனமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கைது செய்யப்பட்ட நபர்களிடம் மேலதிக விசாரணைகளை காவல்துறையினா்முன்னெடுத்து வருகின்றனர். 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More