Home இலங்கை தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் தேர்தல் அறிக்கை

தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் தேர்தல் அறிக்கை

by admin

 

ஜனாதிபதித் தேர்தல் 2024
தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின்
தேர்தல் அறிக்கை

தமிழ்த் தேசிய இனமானது கடந்த ஏழு தசாப்தங்களுக்கு மேலாக விடுதலைக்காகப் பல்வேறு வழிமுறைகளில் போராடிவருகிறது. இப்  போராட்டத்தின் ஒருவழிமுறையாகத், தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு  ஆகிய நாம் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஒருதமிழ்ப் பொதுவேட்பாளரை முன்னிறுத்தியுள்ளோம்.

மட்டக்களப்புமாவட்டத்தைச் சேர்ந்தமுன்னாள் நாடாளுமன்றஉறுப்பினர் திரு.பா.அரியநேத்திரன் அவர்கள் சங்குச் சின்னத்தின்கீழ் தமிழ்ப் பொதுவேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளார். தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்புஎன்பது,தமிழ்த் தேசியக் கட்சிகளும் தமிழ் மக்கள் பொதுச்சபை என்ற மக்கள் அமைப்பும் இணைந்து உருவாக்கிய ஒரு கட்டமைப்பாகும்.

தமிழீழவிடுதலை இயக்கம்,தமிழ் மக்கள் கூட்டணி,தமிழீழமக்கள் விடுதலைக் கழகம்,ஈழ மக்கள் புரட்சிகரவிடுதலைமுன்னணி,தமிழ்த் தேசியக் கட்சி,ஜனநாயகப் போராளிகள் கட்சி,தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் ஆகிய ஏழு கட்சிகளும்தமிழர்தாயகத்தைச் சேர்ந்த அரசியற்செயற்பாட்டாளர்கள்,கருத்துருவாக்கிகள்,புத்திஜீவிகள்,சிவில் சமூகங்கள்,அரசசார்பற்றஅமைப்புகள்,தொழிற்சங்கங்கள்,கிராமமட்டஅமைப்புகள்;,தொழில்சார்அமைப்புகள்,கூட்டுறவு அமைப்புகள், மாணவ அமைப்புகள் இணைந்துஉருவாக்கியமக்கள் அமைப்பாகிய தமிழ்மக்கள் பொதுச்சபையும் இணைந்துஉருவாக்கிய ஒருகட்டமைப்பேதமிழ்த்தேசியப் பொதுக் கட்டமைப்புஆகும்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியில் உள்ள மிகச்சிறுபகுதியினர் தவிர ஏனைய அனைவரும் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு ஆதரவாகச் செயற்பட்டுவருகிறார்கள்.
தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு எனப்படும் இந்தக்கூட்டணி கடந்த 15 ஆண்டுகளில்; உருவாக்கப்பட்ட கூட்டணிகளில் ஒப்பீட்டளவில் பெரியஅணியாகும். இதுதமிழ் ஒற்றுமையின் புதிய நம்பிக்கையாகவும் எதிர்காலத்தமிழ் அரசியலுக்கானபலமானஅடித்தளமாகவும் எழுச்சிபெறும்.
ஈழத் தமிழர்களாகியநாம் இலங்கைத் தீவில் தனித்துவம் மிக்கஒருதேசிய இனமாகவும்,தேசமாகவும் வாழ்ந்து வருகிறோம். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட,மரபுவழித் தாயகத்தைக் கொண்ட,தனித்துவமிக்கபண்பாட்டைக் கொண்டஒருதேசம் ஆவோம்

 

இலங்கைத் தீவுபல்லின,பலமத,பலமொழி,பல்கலாசாரத்தைக் கொண்ட ஒருதீவாகும். இலங்கைத் தீவின் பல்லினத்தன்மையை ஏற்றுக் கொள்ள மறுத்ததன்  விளைவே இனப்பிரச்சினை தோற்றம் பெறுவதற்கும் கூர்மை அடைவதற்கும் இறுதியில் விஸ்வரூபம் எடுப்பதற்குமான மூல காரணமாகும்.தமிழ் மக்களுடையதேசிய இருப்பைஅழிக்கும் செயற்பாடுகளே இன அழிப்பாகும்.

தமிழர்தேசத்தின் இருப்பையும் தனித்துவத்தையும் அழித்துபெரும்பான்மை இனத்துடன் அதனைக் கரைக்கும் உள்நோக்கத்தோடுசிங்களபௌத்தஅரசுக் கட்டமைப்பானது திட்டமிட்டு முன்னெடுத்த இனஅழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகத் தமிழ் மக்கள் முதலில் அகிம்சைவழியிலும் பின்னர் ஆயுதவழியிலும் போராடினார்கள். அப்போராட்டங்களை நிர்மூலமாக்கும் குறிக்கோளோடு ஏவிவிடப்பட்ட அரச பயங்கரவாதத்தின் மிகக் கொடியவிளைவே இறுதிப் போரில் நிகழ்ந்தஉச்சமான இன அழிப்பாகும்.

இந்தப் பின்னணியில் உலகின் மிகப்பெரிய தமிழ் சட்டமன்றமாகிய தமிழகசட்டமன்றம் இலங்கைத் தீவில் தமிழர்களுக்கெதிராக இடம்பெற்றது. இன அழிப்பு என்று ஏகமனதாகத் தீர்மானமாக நிறைவேற்றியது. வடமாகாண சபை அதை இனஅழிப்பு என்று ஏகமனதான ஒரு தீர்மானமாக நிறைவேற்றியது. கனடாவில் பிரம்டன் நகர சபை அதை இன அழிப்பென்றுஏகமனதான ஒரு தீர்மானமாக நிறைவேற்றியது. கனேடிய நாடாளுமன்றம் மே பதினெட்டினைத்தமிழ் இனப்படுகொலை நினைவுகூரல் நாளாக ஏகமனதாக ஏற்றுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றியது.

பிரான்சில் உள்ள நான்கு மாநகரசபைகளான FkhefurigfshdBobigny,Sevran,Choisy-Le-Roi,Vitry-Sur-Sein  என்பனஅது இன அழிப்பு என்று தீர்மானமாக நிறைவேற்றின. ஐக்கியஅமெரிக்கப் பிரதிநிதிகள் சட்டசபையில்( Congress)இந்தஆண்டு மே15 அறிமுகப்படுத்தப்பட்ட 1230 தீர்மானமானது ஈழத் தமிழர்களுக்கு எதிராக ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் நடத்தப்பட்டது இனஅழிப்பு என்பதை ஏற்றுக்கொள்கின்றது.

ஈழத் தமிழர்களுக்கான நிரந்தரஅரசியல் தீர்வைக் காணும் பொருட்டு சுயநிர்ணயஉரிமையை அங்கீகரித்து,அவர்கள் தங்களுக்கு என்ன தீர்வு வேண்டும் என்பதை நிர்ணயிப்பதற்கு ஒரு பொதுவாக்கெடுப்பு அவசியம் என்பதை அத்தீர்மானம் வலியுறுத்துகின்றது.

எனினும்,இன்றுவரை இன அழிப்புக்குபரிகாரநீதியும் கிடைக்கவில்லை; இன அழிப்புச் செயற்பாடுகள் நிறுத்தப்படவுமில்லை.மாறாக,
1-திருகோணமலையில் தமிழர் மரபுரிமைச் சின்னங்கள் இருந்த இடங்கள் தொல்லியல் திணைக்களத்தால்; ஆக்கிரமிக்கப்பட்டு அவ்விடங்கள் வேகமாகசிங்கள பௌத்தமயமாக்கப்படுகின்றன.
மேலும்,குச்சவெளிபிரதேசசெயலாளர் பிரிவில் ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் அளவில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு 26க்கும் அதிகமான விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ளசிலபாரம்பரியதமிழ்க் கிராமங்களை சிங்கள மாவட்டங்களுடன் இணைத்து வடக்கையும் கிழக்கையும் துண்டாடும் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் பல நீதிமன்றத் தீர்ப்புகளை மீறுபவை. இனஅழிப்பு நடவடிக்கைகளால் அதிகம் விழுங்கப்பட்ட ஒருமாவட்டம் இது

.
2-மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருபுறம் சிங்களபௌத்தமயமாக்கல் நடந்துவருகிறது.இன்னொருபுறம் நிலப்பறிப்புதொடர்கிறது. உதாரணமாக 3000குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கான கால்நடை சார்ந்த பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கத்தோடு மயிலத்தமடு, மாதவனை போன்ற இடங்களில் மேய்ச்சல் தரைகளைஅரசஅனுசரணையோடும் பாதுகாப்போடும் சிங்கள விவசாயிகள் ஆக்கிரமித்து வருகிறார்கள்.

இங்கேயும் நீதிமன்றத்தீர்ப்புகள் மீறப்படுகின்றன. வாகரை. கதிரவெளியில் கனிமவளஅகழ்வுமக்களின் எதிர்ப்பைமீறிமுன்னெடுக்கப்படுகின்றது. வாகரையில் இறால் பண்ணைகள் மக்களுடைய எதிர்ப்பை மீறி முன்னெடுக்கப்படுகின்றன. இவ்விரண்டு விடயங்களும் மக்களுடைய வாழ்வாதாரத்தைப் பாதிப்பவை. சுற்றுச் சூழல் பாதுகாப்புக்குஎதிரானவை.

3-அம்பாறைமாவட்டத்தில் கல்முனை வடக்கு தமிழ்ப் பிரதேசசெயலர் பிரிவை முழுமையானஒருபிரதேசசெயலர் பிரிவாகத்தரம் உயர்த்துமாறு தமிழ்மக்கள் தொடர்ச்சியாகப் போராடிவருகிறார்கள். இன்றுவரை ஆட்சிக்கு வந்த எந்த ஓர் அரசாங்கமும் அந்தப் பிரச்சினையைத் தீர்க்க விரும்பவில்லை.இனஅழிப்புநடவடிக்கைகளால் அதிகம் விழுங்கப்பட்டமற்றொருமாவட்டம் இது.

4-வடக்கில் முல்லைத்தீவு,வவுனியாமாவட்டங்களில் குருந்தூர் மலை,வெடுக்குநாறிமலை,நீராவியடிஆகிய இடங்களில் தமிழ் மரபுரிமைச் சின்னங்கள் அமைந்திருக்கும் சிறுமலைகளில் அரசதிணைக்களங்களும் பிக்குகளும் அரசபடையினரும் பௌத்த கட்டுமானங்களை உருவாக்கி வருகிறார்கள். அங்கேயும் நீதிமன்றத் தீர்ப்புகள் மீறப்படுகின்றன. இக்கட்டளைகளை வழங்கிய ஒரு நீதிபதி நாட்டை விட்டுத் தப்பியோடும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

அதற்காகவெட்கப்படவேண்டியஅரசாங்கம்அவரைத்தனிப்பட்டமுறையில் சிறுமைப்படுத்தியது. முல்லைத்தீவில் உள்ளகொக்குத்தொடுவாயில் மேற்கொள்ளப்படும் மனிதப் புதைகுழிஅகழ்வானதுபன்னாட்டுநிபுணர்களின் மேற்பார்வையின் கீழ் இடம்பெறவில்லை. யுத்தம் முடிவடைந்தபின்னர் முல்லைத்தீவில் மட்டும் 67 பௌத்தவிகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவில் பொதுமக்கள் மற்றும் இராணுவம் இடையிலான விகிதம் 2:1 ஆக இன்னமும் இருக்கின்றது. சுமார் 100க்கும் மேற்பட்ட படையினர் முகாம்கள் முல்லைத்தீவுமாவட்டத்தில் மட்டும் அமைக்கப்பட்டுள்ளன.
5-வவுனியா மாவட்டத்தில் கொக்கச்சான் குளம் என்ற தமிழ் மக்களின் பாரம்பரிய விவசாயக்குடியிருப்பு இராணுவப் பாதுகாப்புடனும் அரசஅனுசரணையுடனும் ஆக்கிரமிக்கப்பட்டு ;;கலாபோபஸ்வேவ’ என்ற பெயருடைய சிங்களக் கிராமமாகமாற்றப்பட்டு மிகக்குறுகியகாலத்துக்குள் அந்தகிராமத்துக்குத்தேவையானசகலஉட்கட்டுமானவசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று,அம்பாந்தோட்டையிலிருந்துகொண்டுவரப்பட்டவர்களைஅரசின் அனுசரணையோடுகுடியமர்த்தி ‘நாமல்கம’என்றஒருகிராமம் உருவாக்கப்பட்டுள்ளது.

6-மன்னார் மாவட்டத்தில்,கனிம வளம் பறிக்கப்படுகின்றது. அங்குள்ள முள்ளிக்குளம் கிராமத்தை ஆக்கிரமித்துவைத்திருக்கும் ஸ்ரீலங்கா கடற்படையானது அக்கிராமத்தின் பூர்வகுடிகளானதமிழ் மக்களை அங்கு முழுமையாக மீளக் குடியமரவிடாமல் தடுத்துவருகின்றது. மன்னார் புதைகுழிதொடர்பானஉண்மைகள் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை

7-கிளிநொச்சிமாவட்டத்தில்தமிழர் மரபுரிமைச்சொத்துகளைதொல்லியல் திணைக்களம் ஆக்கிரமித்து வருகின்றது.

8-யாழ்ப்பாண மாவட்டத்தில் படைத்தரப்பு முகாம்களைஅ மைத்திருக்கும் பெரும்பாலான காணிகள் தனியாருக்குரியவை.இவற்றுள் மிகச்சிறிய நிலப்பரப்புத்தான் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளது. இந்தமாவட்டத்திலும் தமிழர் மரபுரிமைச் சொத்துக்கள் பல ஆக்கிரமிக்கப்பட்டு சிங்களபௌத்த மயமாக்கப்பட்டுள்ளன.

நாவற்குழியில்அரசின் அனுசரணையோடுஒருசிங்களக் குடியேற்றம் உருவாக்கப்பட்டிருக்கிறது. தையிட்டியில் தனியார் காணியில் சட்டவிரோதமாக ஒரு புதிய விகாரைபடையினரால் கட்டப்பட்டுவிட்டது.

9-தமிழர் தாயகம் எங்கும் தனியார் காணிகள் படையினரால் அபகரிக்கப்பட்டுவருகின்றன. ஏற்கனவே அபகரிக்கப்பட்ட தனியார் காணிகள் பல இதுவரை விடுவிக்கப்படவில்லை. ஆனால் பெரும்பகுதி விடுவிக்கப்பட்டுவிட்டதாக அரசபுள்ளிவிபரங்கள் பொய் கூறுகின்றன.

தமிழர் தாயகமெங்கும் வனவளத் திணைக்களமும்,வனஜீவராசிகள் திணைக்களமும் காடுகளின் பாதுகாப்பு, வனஉயிரினங்களின் பாதுகாப்பு என்ற பெயரில் தனியார் காணிகள், பயிர்ச்செய்கைநிலங்கள், வணக்கத்தலங்கள் உள்ளடங்கியபல்லாயிரக்கணக்கானஏக்கர்கள் அளவுநிலத்தை அபகரித்து வைத்திருக்கின்றன.

மேற்குறிப்பிடப்பட்டவைசிலஉதாரணங்கள்மட்டுமே.கடந்த 15 ஆண்டுகளாக நிலப்பறிப்பும் சிங்கள பௌத்தமயமாக்கலும் அரசுக் கொள்கையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

10-புனர்வாழ்வின் பின் விடுவிக்கப்பட்டமுன்னாள் இயக்கத்தவர்கள் 15 ஆண்டுகளின் பின்னரும் தொடர்ச்சியாகஅச்சுறுத்தல்களின் மத்தியில் வாழ்ந்துவருகிறார்கள்.

11-தமிழ் மக்களின் அரசுக்கு எதிரான செயற்பாடுகளைப்ப யங்கரவாதமாகச் சித்திரிக்கக் கூடிய வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் பயங்கரவாததடைச் சட்டம் தொடர்ந்தும் தமிழ் மக்களின் தலைக்குமேல் தொங்கிக் கொண்டிருக்கிறது

12-அரசியல் கைதிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. மாறாக,பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தமிழர்கள் தொடர்ந்தும் கைதுசெய்யப்படுவதுமுழுமையாகநிறுத்தப்படவும் இல்லை.

13-மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள்;,அரசியற்செயற்பாட்டாளர்கள் மீதானஅடக்குமுறைகளும் அச்சுறுத்தல்களும் தொடர்கின்றன.

14-வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டம் பலஆண்டுகளாகத்தொடர்ந்து நடந்துவருகிறது.காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இன்றுவரை நீதி கிடைக்கவில்லை.

வலிந்துகாணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்கான சர்வதேசதினமாகிய கடந்த ஓகஸ்ட்  முப்பதாம் திகதியன்று திருகோணமலையில் நடந்த எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்ட உறவினர்கள் மற்றும் அரசியற் செயற்பாட்டாளார்கள் மீது அரசபயங்கரவாதமானது போலீஸ் நடவடிக்கை என்ற வடிவத்தில் ஏவிவிடப்பட்டது.

நீதிமன்றகட்டளையின் கீழான இச்சட்டநடவடிக்கை மூலம் அப்பேரணி குலைக்கப்பட்டது.  இவ்வாறு கட்டமைக்கப்பட்ட இன அழிப்புச் செயற்பாடுகள் தமிழர் தாயகமெங்கும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தமிழர்களின் தாயகத்தின் நிலத் தொடர்ச்சியைத் துண்டாடுவது, இன விகிதாசாரத்தைக் குறைப்பது,நிலத்தைப் பறிப்பது,தமிழ் மரபுரிமைச் சின்னங்களை அழிப்;பது, அங்கே சிங்களபௌத்த மரபுரிமைச்சின்னங்களை ஸ்தாபிப்பது போன்ற அனைத்துச் செயற்பாடுகளும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் வௌ;வேறுவடிவங்களே.

இந்தநடவடிக்கைகள் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கப்படமுடியாத தன்மையைக் கொண்டவை. ஸ்ரீலங்காஅரசு என்ற மையத்திலிருந்து உள்நோக்கத்துடன் திட்டமிடப்படுகின்றவை.தொல்லியல் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம்,வனவளத் திணைக்களம் போன்ற அரசதிணைக்களங்கள் ஆக்கிரமிப்பைப் பகலில் சட்டரீதியாகச் செய்கின்றன.பிக்குகள் ஆக்கிரமிப்புநடவடிக்கைகளில் முன்னணியில் நிற்கிறார்கள். அவர்கள் சட்டத்தையோ நீதிமன்றத்தையோ காவல்துறையையோ மதிப்பதில்லை.படையினர் இரவுகளில் பௌத்தகட்டுமானங்களை இரகசியமாகக்  நிர்மாணிக்கின்றார்கள்.

நிலப்பறிப்பு,சிங்களபௌத்தமயமாக்கல்,அரசின் அனுசரணையுடனான குடியேற்றநடவடிக்கைகள் போன்ற நடவடிக்கைகளில் படைத் தரப்பு ஒரு சமாந்தரமானஅரசைப்போலசெயற்படுகின்றது.அதில் வடக்குகிழக்கில் மட்டும் 65,000 ஏக்கர்களுக்குமேற்பட்டநிலப்பரப்புபடையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது

இனவழிப்புச்செயற்;பாடுகளைத்தொடர்ச்சியாகமுன்னெடுத்துவரும் அதேவேளை நாட்டில் பொருளாதாரப் பிரச்சினைதான் உண்டு என்று பொய்யான தோற்றத்தைக் கட்டியெழுப்பி பன்னாட்டு சமூகத்தைநம்பவைக்கஅரசாங்கம் முயற்சித்துவருகிறது.

இனப்பிரச்சினைக்குஅரசியல் தீர்வுகாணமறுத்து இன அழிப்புயுத்தத்தைத் தொடர்ந்துமுன்னெடுத்தகாரணத்தாலேயேநாடுகடனாளியாகியது.எனவே, இப்பொழுதுநாட்டைபிடித்துலுப்பும் பொருளாதார நெருக்கடிக்கு மூலகாரணம் யுத்தத்திற்காக  வாங்கியகடன் சுமைதான்.

இப்பொழுது தென்னிலங்கையில் வேட்பாளர்களாகக் களமிறங்கியுள்ள அனைவரும் பொருளாதார நெருக்கடி எனப்படுவது இனப்பிரச்சினையின் விளைவுதான் என்பதனை மறைக்கின்றனர்.இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க முடியாது என்றஆழமானஉண்மையை எந்தஒரு தென்னிலங்கை வேட்பாளரும் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளவில்லை.

அவர்களுடைய பரப்புரையின் குவிமையமாக இருப்பது நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து எப்படி மீட்டெடுப்பது என்பதுதான்.இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காகத் தமிழ் மக்களால் ஏற்கத் தக்கபொருத்தமானமுன்மொழிவு எதனையும் அவர்களில் யாரும் இதுவரை முன்வைக்கவில்லை.

யுத்த தளபாடங்களுக்காக முன்பிருந்த அரசாங்கங்கள் 25000 கோடி அமெரிக்க டொலர்களைச் செலவழித்துள்ளதாக இந்திய பாதுகாப்புத்துறை சார்ந்த ஒரு நிபுணரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தப் பணத்தைச் செலவழித்து முன்னெடுக்கப்பட்ட யுத்தத்தின் விளைவாக ஏற்பட்ட உயிரழிவு,பொருள் அழிவைக் குறித்து இதுவரையிலும் உத்தியோகபூர்வ மதிப்பீடு எதுவும் இலங்கைஅரசாங்கத்தால் செய்யப்பட்டிருக்கவில்லை. அந்தஅழிவுகளில் இருந்துதமிழ் மக்களைமீட்டெடுப்பதற்கானஎந்த ஒரு சிறப்புசெயல்திட்டமும்  இன்றுவரையிலும் உருவாக்கப்படவுமில்லை.

யுத்தத்துக்காகப் படையினரின் ஆட்தொகை பல இலட்சமாக அதிகரிக்கப்பட்டது.இலங்கையின் மொத்தத் தேசியஉற்பத்தியில் 40 விகிதம் படையினருக்கே செலவழிக்கப்படுகிறது. இலங்கைத்தீவின் அரச உத்தியோகத்தர்களுக்கு  வழங்கப்படும் மொத்தச் சம்பளத்தில் ஏறக்குறையச் சரிபாதிபடையினருக்கான சம்பளமாக வழங்கப்படுகிறது.

கடந்த 15 ஆண்டுகளிலும் படைத்தரப்பின் ஆட்தொகை குறிப்பாக வடக்குகிழக்கில் குறைக்கப்படவில்லை.அதாவது இராணுவமயநீக்கம் நிகழவில்லை. மாறாக,தேசியப் பாதுகாப்புஎன்றபோர்வையில் தமிழர் தாயகத்தைசிங்களபௌத்தமயப்படுத்தும் நிகழ்ச்சிநிரலை நிறைவேற்றுவதற்காகவே படைத்தரப்பு பெருஞ் செலவில் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறானஇராணுவபொருளாதாரச் சூழலுக்குள் புலம் பெயர்ந்ததமிழர்கள் முதலீடுசெய்யத் தலைப்பட்டமாடடார்கள்.அண்மைக்காலங்களில் அதிகரித்த அளவில் தமிழ் மக்கள் புலம் பெயர்ந்துவருகிறார்கள் .தற்போது புலம்பெயர்பவர்கள் படித்தவர்கள்: சமூகத்தில் பொறுப்பான பதவிகளை வகித்தவர்களே.இப்படிப்பட்ட தலைமை தாங்கும் தகைமையுள்ளபடித்தவர்கள் சமூகத்தில் இருந்து வெளியேறுவது எதிர்காலத்தில் தமிழ் மக்களின் அரசியலில் பாதகமான விளைவுகளைஏற்படுத்தும்.

இவ்வாறானஇராணுவப் பொருளாதார சூழலுக்குள் தமிழ் மக்கள் மத்தியில் கூட்டுணர்வையும் நம்பிக்கையையும் தமிழ்த் தேசிய ஒருமைப்பாட்டையும் கட்டியெழுப்ப வேண்டியதுஅவசியம். அதேசமயம் இனப்பிரச்சினைக்கான தீர்வின் அவசியத்தையும் அவசரத்தையும் தென்னிலங்கைக்கும் உலகசமூகத்துக்கும் நிராகரிக்கப்படமுடியாதவிதத்தில் உணர்த்த வேண்டியதும் அவசியம்.

 

தமிழ் மக்களுக்குபொருளாதாரப் பிரச்சினைகள்தான் உண்டு என்று தொடர்ச்சியாக ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் கூறிவரும் ஒருபின்னணியில்இனப் பிரச்சினையைப் பேசுபொருளாக்கி அதன்மீது தென்னிலங்கையின் கவனத்தையும் உலகத்தின் கவனத்தையும் ஈர்க்கும் நோக்கத்தோடு,தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பினராகியநாம் ஒருபொதுத் தமிழ் வேட்பாளராக திரு.பாஅரியநேத்திரன் அவர்களைமுன் நிறுத்துகிறோம்.

கடந்த 46 ஆண்டுகளாகத்தமிழ் மக்கள் யாரோ ஒரு தென்னிலங்கைவேட்பாளருக்குவாக்களித்துவந்திருக்கிறார்கள்;. 2009க்குப் பின் 3 ஜனாதிபதித்தேர்தல்களிலும் தமிழ்மக்கள் தென்னிலங்கை வேட்பாளர்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள். இவர்களில் வென்றவர்களும் சரி தோற்றவர்களும் சரி இன்றுவரையிலும் இனப்பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளத் தக்க ஒருதீர்வைத் தரவும் இல்லை;

இன அழிப்புச் செயற்பாடுகளை நிறுத்தவும் இல்லை.  கடந்த  46 ஆண்டுகளாக ஜனாதிபதித் தேர்தல்களில் தென்னிலங்கை வேட்பாளர்களுக்கு பதில் வினையாற்றும் அணுகுமுறையில் இருந்து வேறுபட்டு இந்தமுறை தமிழ்மக்கள் செயல்முனைப்போடு ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்வது என்று எடுக்கப்பட்ட முடிவின் விளைவே தமிழ்ப் பொதுவேட்பாளர் ஆகும்.

தமிழ்ப்பொதுவேட்;பாளர் தமிழ் மக்களை ஓரணியாகத் திரட்டுவார். அதேசமயம், இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கித் தமிழ் மக்களின் கூட்டுவிருப்பத்தை உலகசமூகத்துக்கும் தென்னிலங்கைக்கும் வெளிப்படுத்துவார்.இனப்படுகொலைக்கு எதிரான பரிகாரநீதியையும் கோருவார்.

இந்தஅடிப்படையில்,தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பானது இனப் பிரச்சனைக்கான நிரந்தர தீர்வானது பின்வரும் அடிப்படைகளைக் கொண்டிருக்கவேண்டும் என்றுஉறுதியாகவலியுறுத்துகின்றது.

1-இனப்பிரச்சினையைத் தீர்க்கும் நோக்கத்தோடுஉருவாக்கவேண்டிய இலங்கைத்தீவின் புதியயாப்பானதுதமிழ் மக்களை இறைமையும் சுயநிர்ணயஉரிமையும் கொண்டஒருதேசிய இனமாக ஏற்றுக் கொள்ளவேண்டும்.

2-தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக் கொண்டால்தான் இலங்கைத் தீவின் பல்லினத் தன்மையைஉறுதிப்படுத்தலாம். எனவே புதிய யாப்பு ஆனது இலங்கைத் தீவின் பன்மைத் தேசியப் பண்பை உறுதிப்படுத்தும் விதத்தில் தேசங்களின் ஒன்றிணைவாக அமையவேண்டும்.

அதாவதுபுதியயாப்பானது இலங்கைத் தீவுஒருபன்மைத் தேசியஅரசாகக் (Pடரசiயெவழையெட ளுவயவந) கட்டமைக்கப்படுவதை உறுதிசெய்யவேண்டும்.

3-ஒற்றையாட்சிக்கு உட்பட்டஎந்தஒருஅரசியல் தீர்வாலும் தமிழ் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளைஒருபோதும் திருப்திப்படுத்த முடியாது.
4-இந்த விடயத்தில் தமிழ் மக்கள் தங்களுக்குஎன்னதீர்வுவேண்டும் என்பதனை தாமே நிர்ணயிப்பதற்குப் பொருத்தமான பன்னாட்டு ஏற்பாடுகளைக் கோருவதற்கு உரித்துடையவர்கள்.
5-தமிழ் மக்களின் சுயநிர்ணயஉரிமையின் அடிப்படையிலான அலகானது ஒன்றிணைந்த தற்போதைய வடக்குகிழக்கு மாகாணங்களை எல்லையாகக் கொண்டுஅமையவேண்டும்.குறித்த சுயநிர்ணய அலகிற்குள் முஸ்லீம் மக்களின் நியாயமானஅரசியல் உரிமைகள் தொடர்பில் திறந்தமனதோடு பேச்சுவார்த்தை நடாத்ததமிழ்த் தேசியப்பொதுக் கட்டமைப்பு த்தயாராகஉள்ளது.

6-மலையகத்தமிழ் மக்களின் தனித்துவமானதேசிய இருப்பைநாம் அங்கீகரிக்கின்றோம். அந்தஅடிப்படையில் அவர்களுக்கு நிரந்தரதீர்வு வழங்கப்படவேண்டும்.மேலும் உடனடிபிரச்சினைகளுக்குஅவர்கள் தொடர்ச்சியாகக் கோரிவரும் தீர்வுகளும் வழங்கப்படவேண்டும். இத்தீர்வுகளுக்கானபோராட்டத்தில் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பானதுமலையகத் தமிழர்களோடுதோளோடுதோள் நிற்கும்.

7-ஈழத் தமிழர்களுக்குஎதிராகஸ்ரீலங்காஅரசுநடத்திய இன அழிப்பு,போர்க் குற்றங்கள்;,மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் யாவும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பன்னாட்டு நீதித்துறைக் கட்டமைப்புக்கூடாகமுழுமையாகவும் முறையாகவும் விசாரிக்கப்பட்டு,பரிகாரநீதி வழங்கப்படுவதுடன்,இன அழிப்புச் செயற்பாடுகள் மீள நிகழாமையை உறுதிசெய்ய வேண்டும்.

இதுவரையிலுமானஐநாமனிதஉரிமைகள் பேரவையின் தீர்மானங்களின் தொகுக்கப்பட்டஅனுபவமாகஐநாபொதுச் செயலர் பொறுப்பு கூறலை ஐநாபொதுச் சபையிடம் பாரப்படுத்துவதன் மூலம் இன அழிப்புக்கு எதிரான பன்னாட்டு விசாரணைகளைஅனைத்துலககுற்றவியல் நீதிமன்றங்களிடம் பாரப்படுத்தவேண்டும்.

8-அபிவிருத்தியின் பெயரால் மேற்கொள்ளப்படும் நிலப்பறிப்பைத் தடுக்கவும,; நமதுவளங்கள் இன அழிப்பின் ஒரு பகுதியாகச் சுரண்டப்படுவதைத் தடுக்கவும் தமிழர் தாயகத்தின் தேசியவளங்களை இயற்கையின் சமநிலைகுலையாதவகையில் வினைத்திறனுடன் பயன்படுத்தவல்ல தற்சார்புபொருளாதாரக் கட்டமைப்புக்களைநாம் உருவாக்கவேண்டும்.

இதற்கேற்றவகையில் தமிழர் தாயகத்தின் பொருளாதார அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு புலம்பெயர்ந்த தமிழர்களின் முதலீடுகளையும் உள்ளுர் மற்றும் சர்வதேசமுதலீடுகளையும் உள்வாங்கும் அதிகாரம் தமிழர் தேசத்துக்கு இருக்கவேண்டும்.

9-தமிழ்க் கடலில் தமிழ் மீனவர்களுடைய கடல் இறைமை உறுதி செய்யப்படவேண்டும்.

10-ஒரு நிரந்தரத் தீர்வைக் கண்டடைவதற்கு இடைப்பட்ட காலகட்டத்தில்,தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்புநடவடிக்கைகளைதடுக்கும் நோக்கத்தோடும்,தமிழர் தேசத்தின் இருப்பைப் பாதுகாக்கும் நோக்கத்தோடும்போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கென்று பன்னாட்டுசமூகத்தின் மேற்பார்வையின்கீழ் விசேட இடைக்காலப்பாதுகாப்புஏற்பாடுஒன்று(Protective Mechanism) உருவாக்கப்படவேண்டும்.

மேற்கண்ட தமிழ்த் தேசியபொதுக் கட்டமைப்பின் நிலைப்பாட்டைஏற்றுத் தமிழ் மக்கள் இதுவேதமதுபொதுநிலைப்பாடுஎன்றுஉலகுக்கும் தென்னிலங்கைக்கும் வெளிக்காட்டபொதுக் கட்டமைப்பின் பொதுவேட்பாளராகிய திரு.பா.அரியநேத்திரன் அவர்களுடைய சங்குச் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்று அன்புரிமையோடு வேண்டி நிற்கின்றோம்.

பொதுவேட்பாளர் ஜனாதிபதியாக வருவதற்காக முன் நிறுத்தப்படவில்லை. அவர் தமிழ் மக்களை ஒன்று திரட்டுவதற்காகவும்,கட்சிகளை ஒன்றிணைப்பதற்காகவும்,தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை ஒருமித்தகுரலில் ஒலிக்கச் செய்வதற்காகவுமேமுன் நிறுத்தப்படுகிறார். ஒன்றுதிரண்ட தமிழ் மக்கள் உலகத்தின் முன்னும் தென்னிலங்கையின் முன்னும் பலமாக நிமிர்ந்துநிற்பார்கள்.

அதாவது அரியநேத்திரன் அவர்களுக்குவழங்கப்படும் வாக்குகள் தமிழ்மக்கள் தங்களுக்குத் தாங்களே வழங்கும் வாக்குகள்தான்.தமிழ் மக்களின் விடுதலைக்காக தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்தவர்களைக் கௌரவிக்கும் வாக்குகள்தான்.

எனவேதமிழ் பொதுவேட்பாளருக்குவாக்களிப்பது தமிழ் மக்களின் தேசியக் கடமையாகும். சங்குச் சின்னத்துக்கு ஆகக்கூடிய தமிழ் வாக்குகளை வழங்குவதன் மூலம் அன்பான தமிழ் மக்களே எங்களை நாங்களே வெற்றி பெறவைப்போம்.

 

 

 

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More