Home உலகம் வடகொரியாவிற்கும் ரஸ்யாவிற்கும் இடையில் கப்பல் சேவை ஆரம்பம்

வடகொரியாவிற்கும் ரஸ்யாவிற்கும் இடையில் கப்பல் சேவை ஆரம்பம்

by admin


வடகொரியாவிற்கும் ரஸ்யாவிற்கும் இடையில் கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் தடையையும் மீறி இவ்வாறு கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  மாங்ஜங்பொங் ( Mangyongbong )என்ற வடகொரியாவிற்கு சொந்தமான கப்பலே இவ்வாறு பயணத்தை ஆரம்பித்துள்ளது. இந்தக் கப்பல் சரக்குகளையும் பயணிகளையும் ஏற்றிச் செல்லும் என தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவிற்கும் வடகொரியாவிற்கும் இடையில் கடுமையான முரண்பாட்டு நிலைமைகள் காணப்படும் நிலையில் ரஸ்ய – வடகெரிய கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விடுதி , பார், கரோக்கே உள்ளிட்ட சகல வசதிகளும் இந்த கப்பலில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சீன சுற்றுலாப் பயணிகள் இந்தக் கப்பலை அதிகம் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More