Home விளையாட்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டித் தொடரை கைப்பற்றியது இந்தியா

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டித் தொடரை கைப்பற்றியது இந்தியா

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டித் தொடரை இந்தியா பைப்பற்றியது. ஐந்தாவதும் இறுதியுமான போட்டி ஜமய்க்காவின் சபீனா பார்க்கில் நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கட்டுகளை இழந்து 205 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இதில் சாய் ஹோப் 51 ஓட்டங்களையும், கயில் ஹோப் 46 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் மொஹமட் சாமி 4 விக்கட்டுகளையும், உமேஸ் யாதேவ் 3 விக்கட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய  அணி 36.5 ஓவர்களில் இரண்டு விக்கட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதில் விரட் கொஹ்லி ஆட்டமிழக்காது 111 ஓட்டங்களையும், தினேஸ் கார்த்திக் ஆட்டமிழக்காது 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இதன்படி மூன்றுக்கு ஒன்று என்ற போட்டிகள் அடிப்படையில் இந்திய அணி தொடரைக் கைப்பற்றி வெற்றியீட்டியுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More